Wednesday, January 6, 2010

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட கல்வி திறனாய்வு எடுத்த விவரம்


அசர் நிறுவனத்தில் இருந்து எங்களிடம் ஒரு வாரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் கல்வி திறனாய்வு செய்வதற்கு பயிற்சி அளிக்க 24 பேர் வேண்டும் என்று சொன்னார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும், பயிற்சிக்கு வரவழைத்து (13.10.2009), (14.10.200அசர் நிறுவனத்தில் இருந்து எங்களிடம் ஒரு வாரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் கல்வி திறனாய்வு செய்வதற்கு பயிற்சி அளிக்க 24 9) இரண்டு நாட்களுக்கு திருமதி.சுமதி மற்றும் திரு.செந்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு அனைவரும் கலந்துக் கொண்டார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் 22 கிராமத்தில் 600 குடும்பங்களும்,அரியலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் 600 குடும்பங்களும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இவர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களுக்கு தங்கும் இடம் மற்றும் சாப்பாடு ஆகியவை நல்ல முறையில் ஏற்பாடு செய்து கொடுத்தோம். கல்வி திறனாய்வு புத்தகத்தை 2.11.09 க்குள் அனைவரும் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் 25.10.09 இல் ஒவ்வொருவரையும் கேட்டால் இனிமேல் தான் எடுக்கப்போவதாகவும் 2தேதிக்குள் கொடுத்துவிடுவோம் என்று கூறினார்கள். அவர்களை தொலைபேசியின் மூலம் அடிக்கடி தொடர்புக் கொண்டு விசாரித்துக் கேட்டால் பேருந்து வசதி சில கிராமங்களுக்கு இல்லை என்றும் அதிக தொலைவில் இருப்பதாகவும் காரணம் கூறினார்கள். பிறகு அசர் நிறுவனத்தில் 5ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கின்றோம் என்று கேட்டுக் கொண்டோம். பிறகு 5ஆம் தேதிக்குள் அனைத்து கிராமங்களும் ஆய்வு செய்து சரிபார்த்து அனுப்பப்பட்டது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home